Search

janani

Mar 26, 2026

விளையாட்டு

பெங்களூரு அணி புதிய உரிமையாளருக்கு கைமாற்றம்

ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் விலையுயர்ந்த அணியாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)அணி புதிய சாதனை படைத்துள்ளது.

சுமார் 16,706 கோடி ரூபாவுக்கு (1.78 பில்லியன் அமெரிக்க டொலர்) இந்த அணியின் முழுமையான உரிமைகளை புதிய கூட்டமைப்பு ஒன்று கொள்வனவு செய்துள்ளது.

அதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான இந்தக் கூட்டமைப்பு, அணியின் தற்போதைய உரிமையாளரான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 100 சதவீதப் பங்குகளையும் பெற்றுள்ளது.

அதித்யா பிர்லா குழுமத்துடன் இணைந்து, டைம்ஸ் ஒஃப் இந்தியா, போல்ட் வென்ச்சர்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோன் ஆகிய நிறுவனங்கள் இந்த பிரம்மாண்டக் கொள்வனவில் பங்கெடுத்துள்ளன.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All