
Rebecca
Jan 27, 2026
விளையாட்டு
சிரேஷ்ட மெய்வல்லுநர் தொடரில் பங்கேற்ற அசங்க திஸாநாயக்க நாடு திரும்பினார்

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற 06ஆவது சிரேஷ்ட மெய்வல்லுநர் தொடரில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 5,000 மீற்றர் நடைப்பந்தயத்தில் தங்கப் பதக்கத்தையும், 3,000 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்ற அசங்க திஸாநாயக்க, இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்தார்.
இப்போட்டித் தொடர் ஜனவரி 23 முதல் 25 வரை இந்தியாவின் அசாமில் நடைபெற்றது.
இதில் ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த 20 நாடுகளிலிருந்து சுமார் 1,000 சிரேஷ்ட வீரர்கள் பங்கேற்றனர்.
பதக்கங்களை வெற்றி பெற்ற அசங்க திஸாநாயக்க, இன்று அதிகாலை 01.55 மணியளவில் சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் 6.E.-1171 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஹிங்குராக்கொடை பகுதியைச் சேர்ந்த இவர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி என்பதோடு, தற்போது உடற்பயிற்சி சிகிச்சையாளராக (Physiotherapist) பணியாற்றி வருகிறார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






