Search

Rebecca

Sep 2, 2025

உள்ளூர்

பேராறு பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்து : மூவர் படுகாயம்

திருகோணமலை - கந்தளாய், பேராறு பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு (01) ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஒரு மோட்டார்சைக்கிள் ஓட்டுனர் பேராறு பகுதியிலிருந்து வெலிங்டன் சந்தி நோக்கி சென்று கொண்டிருந்த போது, மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வெலிங்டன் சந்தியிலிருந்து பேராறு நோக்கி வாகனத்தை செலுத்தியுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக இருவரும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp