2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 29° ☀️ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
வாக்குமூலம் அளிக்க ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வந்த கெஹெலிய!இலங்கையின் பணவீக்கம் 5% இலக்கை நோக்கி படிப்படியாகக் குறையும் – நந்தலால் வீரசிங்க!20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்துடன் SLTDA தலைமைப் பொறுப்பில் சுரன்ஜித் வேவிட்ட!திட்டமிட்ட குற்றக் குழுவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் நபர் நாடு திரும்பினார்!மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்!ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்

பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களைத் திறக்குமாறு அமைச்சர் கோரிக்கை

உள்ளூர்November 30, 2025 · 9 months முன்2
பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களைத் திறக்குமாறு அமைச்சர் கோரிக்கை

திறக்கக்கூடிய நிலையில் உள்ள பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களை நாளை (01) முதல் மீண்டும் திறக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அனர்த்த நிலைமையின்போது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகளின் மற்றும் நிபுணர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவே இந்த நடவடிக்கை அவசியம்.

எனவே, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்குமாறு அனைத்துப் பராமரிப்பு நிலையப் பொறுப்பு அதிகாரிகளிடமும் பணிவுடன் கேட்டுக்கொள்வதாகத் தெரிவித்தார்.