2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

பேராறு பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்து : மூவர் படுகாயம்

உள்ளூர்September 2, 2025 · 12 months முன்0
பேராறு பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் விபத்து : மூவர் படுகாயம்

திருகோணமலை – கந்தளாய், பேராறு பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு (01) ஏற்பட்டுள்ளதுடன், இதன்போது மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஒரு மோட்டார்சைக்கிள் ஓட்டுனர் பேராறு பகுதியிலிருந்து வெலிங்டன் சந்தி நோக்கி சென்று கொண்டிருந்த போது, மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வெலிங்டன் சந்தியிலிருந்து பேராறு நோக்கி வாகனத்தை செலுத்தியுள்ளார். இதன்போது எதிர்பாராத விதமாக இருவரும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் உடனடியாக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கந்தளாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.