2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கித்துல்கலையில் விபத்து: மின் கம்பத்தில் மோதியது பிரதி அமைச்சரின் வாகனம்!

உள்ளூர்April 23, 2026 · 4 months முன்1
கித்துல்கலையில் விபத்து: மின் கம்பத்தில் மோதியது பிரதி அமைச்சரின் வாகனம்!


கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன பயணித்த மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.  

நேற்று (22) இரவு அவர் கொழும்பிலிருந்து ஹட்டன் ஊடாக நுவரெலியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, கித்துல்கலை களுகொஹு தென்ன பகுதியில் அவர் பயணித்த கேப் ரக வாகனம் வழுக்கிச் சென்று வீதியோரத்திலிருந்த மின்சாரக் கம்பமொன்றில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  

இந்த விபத்தின் போது பிரதி அமைச்சருக்கோ அல்லது வாகனத்தைச் செலுத்திய சாரதிக்கோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், விபத்தினால் வாகனத்திற்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கித்துல்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.