2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக தொடரும் போராட்டம் !

உலகம்March 29, 2026 · 5 months முன்3
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக தொடரும் போராட்டம் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவின் பிரதான நகரங்கள் எங்கும் பாரிய மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற ‘மன்னர்கள் வேண்டாம்’ (No Kings) போராட்டத்தின் மூன்றாம் கட்டமாக இந்தப் போராட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

டொனால்ட் ட்ரம்ப் அமுல்படுத்தி வரும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளே இந்தப் போராட்டங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன.

போராட்டத்தின் போது ஜனாதிபதி ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகளின் உருவப்பொம்மைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர்.

அவர்களைப் பதவியில் இருந்து நீக்குமாறும், உடனடியாகக் கைது செய்யுமாறும் போராட்டக்காரர்கள் ஆவேசமாக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

இந்தத் தொடர் போராட்டங்களால் அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அரசியல் ரீதியான பெரும் பதற்றமும் நிலவி வருகின்றது.