2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

உள்ளூர்March 26, 2026 · 5 months முன்3
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்டுள்ள பாரிய தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நாளை முதல் திணைக்களத்தின் அனைத்துப் பொதுச் சேவைகளும் காலவரையறையின்றி இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கணினித் தொகுதியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, ஆட்களைப் பதிவு செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்காரணமாக பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களிலும் ஒருநாள் சேவை உள்ளிட்ட பொதுச் சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.