2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 34°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

பிலிப்பைன்ஸ் வானூர்தி சேவைகள் இடைநிறுத்தம்

உலகம்March 24, 2026 · 5 months முன்0
பிலிப்பைன்ஸ் வானூர்தி சேவைகள் இடைநிறுத்தம்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக உலகளாவிய வானூர்தி எரிபொருள் (Jet Fuel) தட்டுப்பாட்டினால் பிலிப்பைன்ஸின் வானூர்தி சேவைகள் இடைநிறுத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த நாட்டு ஜனாதிபதி பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் (Ferdinand Marcos Jr) தெரிவித்துள்ளார்.

பல நாடுகள் ஏற்கனவே பிலிப்பைன்ஸ் வானூர்திகளுக்கு எரிபொருள் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளன. இதனால் வானூர்திகள் தமக்குத் தேவையான எரிபொருளைப் புறப்படும் இடத்திலிருந்தே ஏற்றிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.

குறுகிய தூரப் பயணங்களை விட, அதிக எரிபொருள் தேவைப்படும் நீண்டதூர (Long haul) சர்வதேச வானூர்தி சேவைகளுக்கே இந்த நெருக்கடி பெரும் சவாலாக அமையும் என அந்த நாட்டு ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.