2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

எரிபொருள் பிரச்சினை வைத்தியசாலை சேவைகள் எச்சரிக்கை

உள்ளூர்March 17, 2026 · 5 months முன்1
எரிபொருள் பிரச்சினை வைத்தியசாலை சேவைகள் எச்சரிக்கை

எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக, வருங்காலத்தில் வைத்தியசாலைக் கட்டமைப்பைப் பராமரித்துச் செல்வதில் கடும் அவதானம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. 

சுகாதார சேவையைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக, வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான தீர்வை தற்போதைய முறைமைக்குள் விரைவாக வழங்க வேண்டும் என அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது தொடர்பாகத் தலையீடு செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கும் அந்தச் சங்கத்தினால் எழுத்துப்பூர்வமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், இதுவரை சுகாதார அமைச்சு உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த தரப்பினர் எவரும் இந்தப் பிரச்சினை குறித்து எந்தவிதக் கவனமும் செலுத்தவில்லை என்று அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

இதற்கமைய, நிலவும் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துப் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.