அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் கைது

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே, 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அவர் கைது செய்யப்பட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புதிய விசாரணைகளை முன்னெடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்திருந்த நிலையில், கடந்த ஒக்டோபர் 2024 இல் சுரேஷ் சல்லே தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
தாக்குதலாளிகளுடன் இவருக்குத் தொடர்பு இருந்ததாக பிரித்தானிய செனல் 4 (Channel 4) ஆவணப்படம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளால் ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், அவர் இதனைத் தொடர்ச்சியாக மறுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.




