2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

தென் மாகாண ஆளுநராகப் பேராசிரியர் சுசிரிபால மானவடு கடமையேற்பு!

உள்ளூர்February 25, 2026 · 6 months முன்2
தென் மாகாண ஆளுநராகப் பேராசிரியர் சுசிரிபால மானவடு கடமையேற்பு!

தென் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் சுசிரிபால மானவடு, இன்று (25) காலை காலியில் அமைந்துள்ள தென் மாகாண ஆளுநர் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் தென் மாகாண பாதுகாப்புப் பிரதானிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.

அரசியலமைப்பின் 154ஆவது சரத்தின் பிரகாரம், நேற்று (24) முதல் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை கலை மன்றத்தின் வானொலி, பத்திரிகை மற்றும் சமூக ஊடக அரச உப குழுவின் பிரதித் தலைவராகச் சேவையாற்றும் பேராசிரியர் சுசிரிபால மானவடு, ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறைத் தலைவராகவும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நூலகராகவும் கடமையாற்றியுள்ளார்.