2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மின்சார சபை மறுசீரமைப்பு மேலும் தாமதம்!

உள்ளூர்February 24, 2026 · 6 months முன்2
மின்சார சபை மறுசீரமைப்பு மேலும் தாமதம்!

தேசிய மின்சக்தி கொள்கை இம்முறையும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (23) அமைச்சரவை கூடிய போதிலும், அதன்போது தேசிய மின்சக்தி கொள்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, தேசிய மின்சக்தி கொள்கைக்கான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது மேலும் தாமதமடைந்துள்ளது.

இதன் காரணமாக இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தாமதமடைவதுடன், இலங்கை மின்சார சபை கலைக்கப்படும் திகதியை அறிவிப்பதும் பிற்போடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் 5 கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டதுடன், அவற்றில் 4 கட்டங்கள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன.

தேசிய மின்சக்தி கொள்கையைத் தயாரிக்கும் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்த பின்னரே இலங்கை மின்சார சபை கலைக்கப்படும் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

எவ்வாறாயினும், இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வெளியிடப்படும் என இலங்கை மின்சார சபை முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.