2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நாளை தொடங்குகின்றது சூப்பர் 8 சுற்றுப்போட்டி…

விளையாட்டுFebruary 20, 2026 · 6 months முன்1
நாளை தொடங்குகின்றது  சூப்பர் 8 சுற்றுப்போட்டி…

T-20 உலக கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர் 8 சுற்று நாளை ஆரம்பமாகிறது. நாளை முதல் மார்ச் மாதம் 01ம் திகதி வரை சுப்பர் 8 சுற்றுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்த சுற்றில் அனைத்து அணிகளும் இரு குழுக்களின் கீழ் போட்டியிடவுள்ளதுடன் முதல் குழுவில் இந்தியா, சிம்பாம்பே, மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இடம்பிடித்துள்ளன. இரண்டாவது குழுவில் இங்கிலாந்து, நியுசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் உள்ளன.

இந்நிலையில் சுப்பர் 8 சுற்றில் இலங்கை பங்கேற்றும் முதல் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ளது. 2வது போட்டி 25ம் திகதி நியுசிலாந்து அணிக்கு எதிராகவும், 3வது போட்டி 28ம் திகதி பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரின் அரையிறுதிப் போட்டிகள் மார்ச் 4ம் மற்றும் 5ம் திகதிகளில் இடம்பெறும். தொடரின் இறுதிப் போட்டி மார்ச் மாதம் 8ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.