அநுரவின் செம்மணி விஜயத்தின் பின் சர்வதேச விசாரணையா..!

செம்மணி பகுதியில் அகழ்வு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அந்த இடத்தை பாரவையிட இருப்பதாக அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.

அநுரகுமார திஸாநாயக்கவின் செம்மணி விஜயத்தின் பின்னர் சர்வதேச விசாரணைக்கு வாய்ப்பிருப்பதாகவும் பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், இதனை ரெலோ பேச்சாளர் கு. சுரேந்திரன் மறுத்துள்ளார்.
சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இணங்க மாட்டோம் என்ற முடிவில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.




