2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

அமெரிக்க குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழ்தலைவர்கள்

உலகம்August 30, 2025 · 12 months முன்0
அமெரிக்க குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழ்தலைவர்கள்

ஆட்சி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் உறவுகளை வளர்ப்பதற்கான வழிகளை ஆராய்வதற்காக அமெரிக்காவிலிருந்து இரு தரப்பு காங்கிரஸ் உறுப்பினர்களையும் கொண்ட் அலுவலர்கள் குழு ஒன்று இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

குறித்த குழு இலங்கை அரசத் தரப்பு உட்பட பலதரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது.

இந்தக் குழுவினர் இன்று தமிழ் பேசும் மக்களின் நேற்று(29) தலைவர்களைக் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடனேயே அந்தக் குழுவினர் விரிவான பேச்சுகளில் ஈடுபட்டுள்ளனர்.