2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்.

உள்ளூர்February 11, 2026 · 6 months முன்1
முழு நாடும் ஒன்றாக வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்.

போதைப்பொருள் ஒழிப்புக்கான “முழு நாடும் ஒன்றாக” தேசிய நடவடிக்கையின் மத்திய மாகாண வேலைத்திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று நுவரெலியாவில் நடைபெறவுள்ளது.

 மலையக மக்கள் எதிர்கொண்டுள்ள பிரதான சமூகப் பிரச்சினையாகப் போதைப்பொருள் பாவனை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்த விரிவான விழிப்புணர்வுப் பொறிமுறையின் ஊடாக, அம்மக்களை அப்பழக்கத்திலிருந்து மீட்டு, சமூக மற்றும் பொருளாதார ரீதியாக அவர்களை உயர்த்துவதே இதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை, போதைப்பொருள் சுற்றிவளைப்புக்களில் சிறப்பாகச் செயற்பட்ட 62 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் இதில் இடம்பெறவுள்ளது.