2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மதகுருவைத் தாக்கிய 6 பொலிஸார் விளக்கமறியலில்!

உள்ளூர்January 26, 2026 · 7 months முன்1
மதகுருவைத் தாக்கிய 6 பொலிஸார் விளக்கமறியலில்!

கத்தோலிக்க மதகுரு ஒருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்துடன், எதிர்வரும் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்பு (Identification Parade) ஒன்றை நடத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, பொலிஸார் தன்னைத் தாக்கியதாகக் கூறி கத்தோலிக்க மதகுரு ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இது குறித்து கம்பஹா பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த 6 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டனர்.

நேற்று (25) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர்கள், இன்று (26) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.