2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

விமலின் சத்தியாக்கிரகப் போராட்டம் – நீதிமன்றம் தீர்ப்பு

உள்ளூர்January 12, 2026 · 7 months முன்1
விமலின் சத்தியாக்கிரகப் போராட்டம் – நீதிமன்றம் தீர்ப்பு

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை தொடங்கிய தொடர்ச்சியான சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பாக கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டம், புதிய கல்வி சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த நீதிமன்ற உத்தரவில் உயர்தரப் பரீட்சைகள் தற்போது அந்தப் பகுதியில் நடைபெற்று வருவதால், போராட்டக்காரர்கள் சாலையைத் தடுக்கக் கூடாது என்றும், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.