இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை.

நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் நீதிச்சேவைகள் அணைக்குழுவிற்கான நடைமுறைகள் தொடர்பில் கடந்த வாரங்களில் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற கட்டமைப்பு மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு ஆகியன ஒன்றுக்கொன்று சுயாதீனமான இரண்டு நிறுவனங்கள் ஆகும் என அதனுடாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சமூகவலைத்தள பதிவுகள்,கருத்துகள் மற்றும் யூடியுப் ஊடாக எதிர்வுகூறல்களை முன்வைத்தல் போன்ற மூன்றாம் தரப்பினரிடம் இருந்து ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து நீதித்துறை கட்டமைப்பு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நிதித்துறை அமைப்பின் சுதந்திரத்திற்காக தொடர்ந்து முன்னிப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது




