2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

தையிட்டியில் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு கஜேந்திரன் அழைப்பு

உள்ளூர்December 27, 2025 · 8 months முன்2
தையிட்டியில் நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்திற்கு கஜேந்திரன் அழைப்பு

எதிர்வரும் 3ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று தையிட்டியிலே வழமைப்போன்று நடைபெறுகின்ற போராட்டம் ஒரு மாபெரும் போராட்டமாக நடாத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் காணி உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

குறித்த போராட்டத்திற்கு ஏனைய அரசியல் தரப்புக்களுக்கும் கலந்துக்கொள்ள வேண்டும் என்கின்ற கோரிக்கைகளும் குறித்த காணி உரிமையாளர்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

அந்த வகையிலே 03ஆம் திகதி நடைபெற இருக்கின்ற குறித்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களும் கட்சி பேதங்களை கடந்து உங்களுடைய நேரங்களை ஒதுக்கி அந்த போராட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த என்.பி.பி அரசாங்கம் ஏனைய அரசாங்கங்களை இனவாத அரசாங்கம் என்று கூறி அவர்கள் வந்த பாதை தவறான பாதை என்பதனால் தான் தமிழ் மக்கள் தமிழ் தேசிய வாதம் என்ற ஒரு நிலைப்பாட்டிற்குள் சென்றார்கள் என்றும் தாங்கள் எல்லோரையும் சமனாக மதித்து சட்டத்தின் ஆட்சியை எல்லோருக்கும் சமனாக நடைமுறைப்படுத்தி இனவாதம், மதவாதம் இல்லாத ஒரு ஆட்சியை நடைமுறைப்படுத்தினால் எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு நிலைமை உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.