2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

‘டிட்வா’ புயலால் சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி.

உள்ளூர்December 27, 2025 · 8 months முன்2
‘டிட்வா’ புயலால் சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி.

‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் மதிப்பீடுகள் இன்றி ரூபாய் 5 இலட்சம் நிதி உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கொபெயிகனே பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற “பிரஜா சக்தி” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும், பகுதியளவில் சேதமடைந்த 1,20,000-க்கும் அதிகமான வீடுகளுக்கு முறையான மதிப்பீடுகளை மேற்கொள்ள சுமார் ஒரு வருட காலம் எடுத்துக்கொள்ளலாம் என்பதால், நிவாரண உதவிகள் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

எந்த குடும்பமும் இந்த 5 இலட்சம் நிலையான இழப்பீட்டை ஏற்க மறுத்தால், அவர்கள் முறையான மதிப்பீட்டை கோரலாம் என்றும், அந்நிலையில் மதிப்பிடப்படும் சேதத்தின் அளவைப் பொறுத்து பல மில்லியன் வரை இழப்பீடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முறையான மதிப்பீடு தேவையில்லாத குடும்பங்களுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே இந்த நிதி உதவியை வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.