2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பாறையில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து

உள்ளூர்December 26, 2025 · 8 months முன்2
பாறையில் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து

ஹொரணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரகெட்டிய – மீவனபலான வீதியின் கலுகஹேன பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றையதினம் மீவனபலான நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த பாறையில் மோதியதில், மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பலத்த காயமடைந்தார்.

அவரை உடனடியாக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பெலவத்தை, மிரிஸ்வத்தையைச் சேர்ந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் ஹொரணை ஆதார வைத்தியசாலையின் பிரதேச அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.