2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வவுனியாவில் கூரிய ஆயுதத் தாக்குதலில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு

உள்ளூர்December 22, 2025 · 8 months முன்0
வவுனியாவில் கூரிய ஆயுதத் தாக்குதலில் 19 வயது இளைஞன் உயிரிழப்பு

வவுனியா மாவட்டம், செட்டிகுளம் – வீரபுரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவரை வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர், வவுனியா தவசிக்குளம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொலைபேசி வழி ஏற்பட்ட உரையாடலின் காரணமாக உருவான வாக்குவாதம் தீவிரமடைந்ததையடுத்து, குழுவொன்றினால் குறித்த இளைஞர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, 19 மற்றும் 22 வயதுடைய மூன்று சந்தேகநபர்களை செட்டிகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய இன்னொரு சந்தேகநபரை கைது செய்யும் நோக்கில் செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.