2026 August 24, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
மாற்றுத்திறனாளி மாணவர்களின் சாதனை பெருமையளிக்கிறது – பிரதமர்!தலதா மாளிகையில் பெரஹரா திருவிழா களைகட்டியது!இந்திய கடற்படை – கடலோர காவல்படை கூட்டுத் தேடுதல்!சுற்றுலா வருமானத்தில் 234 மில்லியன் டொலருக்கும் மேல் சரிவு!ஜனாதிபதி தலைமையில் மாவட்டந்தோறும் மக்கள் கூட்டம்!இன்று நாட்டின் சில பகுதிகளில் மழை!சுகீஸ்வர பண்டாரவுக்கு சிறைச்சாலையில் சிகிச்சை!கலாநிதி நந்தா மாலினியின் இறுதிக்கிரியை இன்று

துசித ஹல்லொலுவவிற்கு பிடியாணை உத்தரவு

உள்ளூர்November 13, 2025 · 9 months முன்1
துசித ஹல்லொலுவவிற்கு பிடியாணை உத்தரவு

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இன்று (13) பிடியாணை பிறப்பித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, போலியான முறைப்பாடு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக துசித ஹல்லொலுவ பெயரிடப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சந்தேகநபரான துசித ஹல்லொலுவ நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.

இதையடுத்து, நீதவான் இந்த பிடியாணையைப் பிறப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.