பயங்கரவாத தாக்குதல் என ஒப்புக்கொண்ட இந்தியா

இந்திய தலைநகர் புதுடில்லியின் செங்கோட்டை பகுதியில் இடம்பெற்ற கார்க் குண்டுவெடிப்பு பயங்கரவாத தாக்குதல் என இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளதுடன், பலர் காயமடைந்தனர்.
இதுவொரு பயங்கவராத தாக்குதல் என இந்தியா நேற்றைய தினம் அறிவித்தது.
தேச விரோத சக்திகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.




