பேருந்துடன் மோதி லொறி விபத்து – மூவர் பலி.

நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இன்று (05) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருநாகலில் இருந்து நாரம்மல நோக்கி சென்ற லொறி, சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியின் வலப்புறம் சென்று, கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியது.
விபத்தில் லொறி சாரதி உள்ளிட்ட 3 பேர் (41, 80, 82 வயதினர்) உயிரிழந்துள்ளனர். மேலும், 40 வயதுடைய பெண், 16 மற்றும் 9 வயதுடைய சிறுமிகள் உள்ளிட்ட மூவர் காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலதிக, விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.




