2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!

பேருந்துடன் மோதி லொறி விபத்து – மூவர் பலி.

உள்ளூர்October 5, 2025 · 10 months முன்0
பேருந்துடன் மோதி லொறி விபத்து – மூவர் பலி.

நாரம்மல – குருநாகல் வீதியின் நாரம்மல நகருக்கு அருகில் லொறி ஒன்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இன்று (05) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருநாகலில் இருந்து நாரம்மல நோக்கி சென்ற லொறி, சாரதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியின் வலப்புறம் சென்று, கட்டுநாயக்கவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி வந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்துடன் மோதியது.

விபத்தில் லொறி சாரதி உள்ளிட்ட 3 பேர் (41, 80, 82 வயதினர்) உயிரிழந்துள்ளனர். மேலும், 40 வயதுடைய பெண், 16 மற்றும் 9 வயதுடைய சிறுமிகள் உள்ளிட்ட மூவர் காயமடைந்து குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலதிக, விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.