வெளியேறினாலும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லம் இன்னும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, தெரிவித்துள்ளார்.
– அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
முன்னாள் ஜனாதிபதி வீட்டை விட்டு வெளியேறி மூன்று வாரங்கள் ஆகிவிட்டன, ஆனால், அவர் இன்னும் அதை உத்தியோகபூர்வமாக பொது நிர்வாக அமைச்சகத்திடம் ஒப்படைக்கவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




