முத்து நகர் போராட்டம்: பிரதமர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது. #Video

திருகோணமலை முத்து நகர் இந்திய நிறுவனங்களுக்கு தங்கள் நிலங்களை வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து முத்துநகர் விவசாயிகள் கொழும்பில் போராட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று பிரதமர் அலுவலகத்திற்கு முன்பான இடம்பெற்றுள்ளது.
முத்து நகர் பகுதியில், சூரிய மின் உற்பத்தி நிலையத்தினை அமைக்கும் நோக்கில், பொதுமக்களின் விவசாய நிலங்கள் அபிவிருத்தி என்ற பெயரில் அபகரிக்கப்படுவதற்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







