2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நாட்டில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகங்கள்.

உள்ளூர்September 20, 2025 · 11 months முன்2
நாட்டில் அதிகரிக்கும் இணையவழி பாலியல் துஷ்பிரயோகங்கள்.

இலங்கையில் 2025ஆம் ஆண்டு தொடங்கி இதுவரையில், இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்கள், 118 பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகியுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 15 சிறுவர்கள் மற்றும் 375 பெண்கள் இணையவழி மூலம் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இதுபோன்ற இழிவான குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 114 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இது தொடர்பான சம்பவங்களிலிருந்து பெண்கள் மற்றும் சிறுவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எமது ஊடகம் சார்பாக நாம் கேட்டுக்கொள்கின்றோம்.