நேபாள போராட்ட வன்முறையில் 51 பேர் உயிரிழப்பு.

நேபாளத்தில் போராட்ட வன்முறையில் இதுவரை 51 பேர் உயிரிழந்து, சுமார் 1,300 பேர் காயமடைந்துள்ளனர் என நேபாள சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
போராட்டம் கட்டுப்பாடற்ற வன்முறையாக மாறியதால், நாட்டில் பாதுகாப்பை நிலைநாட்டும் பொறுப்பை இராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இடைக்கால பிரதமர் நியமனத்திற்காக இளைஞர் போராட்டக்குழு மற்றும் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி உட்பட பலர் நடவடிக்கையில் உள்ளனர்.
இந்நிலையில், இராணுவ அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது.




