வெளியேறும் மஹிந்த – குவிந்த அரசியல்வாதிகள்.

மஹிந்த ராஜபக்ச இன்று உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறவுள்ள நிலையில்,
கொழும்பு விஜேராம வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகப்பூர்வ இல்லத்திற்கு இன்று (11) காலை அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள் வருகை தந்து வருகின்றனர். நேற்று (10) நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் அடிப்படையில், அவர் இனி அந்த இல்லத்தில் தொடர வியலாத நிலையில், இன்று வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




