2026 September 3, Thursday 🌧️ கொழும்பு 30° ☀️ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° ⛅ மட்டக்களப்பு 32°
LIVE
இளைஞர் வெளியேற்றம் குறித்து பூட்டான் அரசருடன் ஹரிணி கலந்துரையாடல்!டெங்குவில் அலட்சியம் வேண்டாம் – வைத்தியர்கள் எச்சரிக்கை!மெஸ்ஸியின் விடைபெறலை கொண்டாடும் ஆர்ஜென்டீனா ரசிகர்கள்!வடக்கு–கிழக்கில் தமிழ் மக்களின் குடிப்பரம்பலை மாற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன – சாணக்கியன்!ட்ரம்பின் உருவத்துடன் சிறப்பு 1 டொலர் நாணயம்!NPP உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் பரிசீலிக்க கோரிக்கை!உலக அரசியல் பதற்றம்; தங்கத்தை நகர்த்திய நெதர்லாந்து!அருந்திக பெர்னாண்டோவின் சொத்துக்கள் தொடர்பிலும் விசாரணை!

NPP உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் பரிசீலிக்க கோரிக்கை!

உள்ளூர்September 3, 2026 · 2 hours முன்5
NPP உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகள் பரிசீலிக்க கோரிக்கை!

தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 159 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக ‘தினன தகுண’ (Dhinana Dakuna) அமைப்பு, கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற போதிலும், அவர்கள் அந்த நிதியை மக்கள் விடுதலை முன்னணியின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்வதன் மூலம் 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

நேற்று (2) கையூட்டல் அல்லது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முறைப்பாட்டில், 2023ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விரைவான விசாரணையை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.

ஐந்து முக்கிய காரணங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டின் மூலம், தேசிய மக்கள் சக்தியின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறும், கட்சியின் வங்கிக் கணக்குகளைப் பரிசீலிக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.