2026 August 31, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
22ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுக்கள் விசாரணைக்கு!கோதுமை மா விலை உயர்வால் பாண் விலையிலும் மாற்றம்!கடும் வறட்சி – நீர் விநியோகத்திற்கு நேரக் கட்டுப்பாடு!வாக்குமூலம் அளிக்கச் சென்ற ரவி கைது!பெட்ரோல் விலையில் ஒரே நேரத்தில் அதிரடி குறைப்பு!அர்ச்சுனாவின் எம்.பி. பதவி குறித்து சட்டத்தரணி புதிய கோரிக்கை!முச்சக்கர கட்டணத்தில் மாற்றமில்லை!ஒரே வாரத்தில் ரூ.408 மில்லியனை கடந்த வருமானம்!

மழை, காற்று, மின்னல் – வானிலை எச்சரிக்கை!

உள்ளூர்August 31, 2026 · 9 hours முன்17
மழை, காற்று, மின்னல் – வானிலை எச்சரிக்கை!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

வடமேல் மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என்பதுடன், ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. 

அதேநேரம், சூரியனின் தோற்ற தென்திசை நோக்கிய சார்பு இயக்கத்தின் காரணமாக, ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. 

அதற்கிணங்க இன்று (31) நண்பகல் 12.10 அளவில் நேரியகுளம், பூனேவ, கெப்பித்திகொல்லாவ, பன்குளம் மற்றும் சிங்கபுர ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.