ஜெருசலேமில் துப்பாக்கி சூடு : 15 பேர் காயம்

ஜெருசலேமின் ராமோட் சந்திப்பு நுழைவாயிலில் துப்பாக்கி சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது 15 பேர் படுகாயமடைந்துள்ளதோடு, அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதற்கட்ட தகவல்களின்படி, குறைந்தது இரு துப்பாக்கிதாரிகள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




