2026 August 21, Friday ⛅ கொழும்பு 30° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
2027 பரீட்சை கால அட்டவணை வெளியானது!வாக்குமூலம் வழங்க வந்த நாமல் ராஜபக்ஷ!பொலிஸ் தலைமையகத்திலிருந்து விசேட அறிவிப்பு!நந்தா மாலினிக்காக தேசிய துக்க தினங்கள்!சிறுபோக நெல் கொள்வனவுக்கு பாரிய நிதி ஒதுக்கீடு!அதிகாலை நடந்த கோர விபத்தில் ஐவர் பலி!மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!சீருடை விவகாரத்தை இன முரண்பாடாக மாற்ற வேண்டாம் – MP சாணக்கியன்

நந்தா மாலினிக்காக தேசிய துக்க தினங்கள்!

உள்ளூர்August 21, 2026 · 2 hours முன்4
நந்தா மாலினிக்காக தேசிய துக்க தினங்கள்!

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 

இதற்கமைவாக, இன்று (21), நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய தினங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவுறுத்தலானது 04/2026 ஆம் இலக்க உள்நாட்டலுவல்கள் சுற்றறிக்கையின் ஊடாக அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள்/அரசாங்க அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

2026 ஒகஸ்ட் 21 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கையில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார கையொப்பமிட்டுள்ளார். 

மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவையடுத்து ஒகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தினங்களை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. 

இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி தனது 82 ஆவது வயதில் நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (20) காலமானார்.