2026 August 17, Monday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!

உள்ளூர்August 17, 2026 · 2 hours முன்2
நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!

நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவுச் செயற்றிட்டத்தின் கீழ் இதுவரை 33,666 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அச்சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார். 

இதில் அதிகளவான நெல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலிருந்தே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த ஜூன் மாதம் 13ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் நெல் கொள்வனவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 

பல பகுதிகளில் நெல் அறுவடை நிறைவடைந்துள்ள போதிலும், பொலன்னறுவை, அநுராதபுரம், குருநாகல் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்தார். 

இதற்கமைவாக அப்பகுதிகளில் நெல் களஞ்சியசாலைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் சுட்டிக்காட்டினார். 

நெல் கொள்வனவிற்காக தற்போது 120 இற்கும் அண்மித்த அளவிலான களஞ்சியசாலைகள் செயற்பாட்டில் உள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.