2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 35°
LIVE
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

முன்னாள் அமைச்சர் மீதான ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

உள்ளூர்July 15, 2026 · 1 month முன்3
முன்னாள் அமைச்சர் மீதான ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதி சார்பில் சார்பில் முன்னிலையான இரு சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக விசாரணைகளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 07ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல உத்தரவிட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு இலங்கை உர நிறுவனத்தின் கொள்முதல் முகாமையாளராக கடமையாற்றிய காலத்தில், அந்த நிறுவனத்தின் களஞ்சியசாலை வளாகத்தில் கார்பட் இடும் பணிகளை ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதில், அந்த நிறுவனத்திற்குச் சாதகமான முறையில் செயற்பட்டு ஊழல் புரிந்ததாக முன்னாள் அமைச்சர் குமார ஜயகொடி மீது கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.