2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 29° 🌧️ மட்டக்களப்பு 34°
LIVE
நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை?

உள்ளூர்July 8, 2026 · 1 month முன்1
16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை?

இலங்கையில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை மட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது குறித்து அரசாங்கம் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிறுவர்களை சமூக ஊடகங்களின் தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், இந்த யோசனை குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையுடன் விரிவான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்தச் செயற்திட்டத்தை வினைத்திறனாக நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கமும், ‘வேர்ல்ட் விஷன்’ (World Vision) அமைப்பும் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.