2026 August 18, Tuesday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
ஹிருணிகா உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கில் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!நுவரெலியா கிரகரி வாவியில் பரபரப்பு – இரண்டு சிறுவர்கள் மீட்பு!பாடப்புத்தக விநியோகத்தில் என்ன நடந்தது? விசாரணையில் வெளியாகும் தகவல்கள்ஆகஸ்ட் 21 முதல் 23 வரை ஹப்புத்தாலையில் பிரமாண்ட உணவுத் திருவிழா!பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்!யாழ்ப்பாணத்தில் உருவாகிறது வட இலங்கையின் மிக உயரமான கட்டிடம்!இலங்கையில் முதல்முறை வங்கிகளுக்குள்ளேயே முகாமையாளர்கள் கைது!ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!

வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு! ‘வரி சக்தி 2026’ வரும் 6ஆம் தேதி தொடக்கம்.

உள்ளூர்July 2, 2026 · 2 months முன்1
வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு! ‘வரி சக்தி 2026’ வரும் 6ஆம் தேதி தொடக்கம்.

தேசிய வரி வாரத்தை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் ‘வரி சக்தி 2026’ விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இந்த விசேட வேலைத்திட்டம் இந்த மாதம் 15 ஆம் திகதி வரை தொடரும் என ஜனாதிபதி செயலகத்தின் வருமான நிர்வாகம் மற்றும் நவீனமயமாக்கல் பிரிவின் பணிப்பாளர் அசித முனசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் வரி முறைமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், வரிக்கொள்கைகளுக்கு இணங்கி நடப்பதை ஊக்குவிப்பதையுமே இந்த வேலைத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வரிச் சீர்திருத்தங்கள் காரணமாக, குறிப்பாகப் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி போன்ற வரி விகிதங்கள் தற்போதும் உயர் மட்டத்தில் காணப்படுவதாக அசித முனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த வரி வாரம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டப்பட்டு, வரி வசூலிப்பில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் முறைகேடுகளைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.