2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஈரானின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்காவின் அதிரடித் தா#குதல்!

உலகம்June 28, 2026 · 2 months முன்0
ஈரானின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்காவின் அதிரடித் தா#குதல்!

ஈரான் மீது அமெரிக்க விமானப் படை அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.ஹோமுஸ் நீரிணையில் கப்பல் ஒன்றின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பதிலடியாக, இந்த இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இந்தத் தாக்குதலில், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் (ட்ரோன்) களஞ்சியங்கள் இலக்கு வைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஈரானின் கடலோர ரேடார் மையங்கள் மீதும் அமெரிக்கப் படைகள் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘Truth Social’ சமூக வலைத்தளப் பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். அதில், ‘ஈரான் மீண்டும் ஒருமுறை போர்நிறுத்த உடன்படிக்கையை மீறியுள்ளது. அவர்கள் எதிலிருந்தும் பாடம் கற்கப் போவதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இனிவரும் காலங்களில், அவர்களுடன் எந்தவொரு நியாயமான அணுகுமுறையையும் கையாள முடியாது’ என்று அவர் எச்சரித்துள்ளார்.