2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 26° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!

உலகக் கிண்ணத்தில் ஜெர்மன் வீரர்களுக்கு விசித்திர சிக்கல்!

விளையாட்டுJune 18, 2026 · 2 months முன்2
உலகக் கிண்ணத்தில் ஜெர்மன் வீரர்களுக்கு விசித்திர சிக்கல்!

2026 FIFA உலகக் கிண்ணத் தொடரில் களத்தில் எதிரணிகளை எதிர்கொள்ளும் ஜெர்மனி அணி, தற்போது மைதானத்திற்கு வெளியேயும் ஒரு எதிர்பாராத சவாலை சந்தித்துள்ளது.

அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் அமைந்துள்ள ஜெர்மனி அணியின் பயிற்சி முகாமிற்கு அருகில் நச்சுத்தன்மை வாய்ந்த பாம்பு ஒன்று காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து, பயிற்சியின்போது புற்கள் மற்றும் புதர்ப்பகுதிகளில் வீரர்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக அணித்தலைவர் ஜோசுவா கிம்மிக் தெரிவித்துள்ளார்.

காணப்பட்ட பாம்பு, அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் அதிக நச்சுத்தன்மை கொண்ட ‘கொப்பர்ஹெட்’ வகையைச் சேர்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேபோன்ற அச்சம் சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே அணிகளிடமிருந்தும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகக் கிண்ண வெற்றியை இலக்காகக் கொண்டு தயாராகும் வீரர்களுக்கு, தற்போது பாம்புகளின் நடமாட்டமும் கூடுதல் கவலையாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.