2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° ☀️ மட்டக்களப்பு 32°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

மத்திய கிழக்கு அமைதிக்கு புதிய திருப்பம்!

உலகம்June 13, 2026 · 2 months முன்2
மத்திய கிழக்கு அமைதிக்கு புதிய திருப்பம்!

மத்திய கிழக்கு பிராந்திய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி ஒப்பந்தம் ஒன்றிற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இறுதி உடன்பாட்டிற்கு வந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். 

தனது ‘X’ சமூக ஊடக கணக்கில் பதிவொன்றையிட்டு பிரதமர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், இதன் அடுத்தகட்ட நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக தாம் இருதரப்புடனும் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மோதல்கள் நிலவிய காலம் முழுவதும் இரு நாடுகளுக்கும் இடையில் பிரதான மத்தியஸ்தராக செயற்பட்ட பாகிஸ்தான் பிரதமர் மேலும் வலியுறுத்தியுள்ளதாவது, “இதற்கு முன்னர் எப்போதும் அமைதி இந்த அளவிற்கு நெருக்கமாக இருந்ததில்லை” என்பதாகும்.