2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஆபத்தான கடல் நிலை: தேவையற்ற கடற்பயணங்களைத் தவிர்க்கவும்!

உள்ளூர்June 2, 2026 · 3 months முன்2
ஆபத்தான கடல் நிலை: தேவையற்ற கடற்பயணங்களைத் தவிர்க்கவும்!

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவக்கூடிய பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை இடர்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் விசேட அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

2026 ஜூன் 02 ஆம் திகதி முற்பகல் 10:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பானது, நாளை (2026 ஜூன் 03) முற்பகல் 10:30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவிலுக்கான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

இதன் காரணமாக, இக்கடல் பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பானதாக காணப்படும்.

குறித்த கடல் பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களும், கடற்படை சமூகத்தினரும் இவ்விடயம் குறித்துப் பெரும் விழிப்புடனும், அவதானத்துடனும் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலுள்ள மக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.