2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்!

உள்ளூர்May 31, 2026 · 3 months முன்0
எரிபொருள் விலையில் அதிரடி மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து வகை எரிபொருட்களின் விலைகளிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாயால் உயர்த்தப்பட்டு, புதிய விலை 407 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லங்கா சுப்பர் டீசலின் விலை 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 478 ரூபாயாகும்.

மேலும், ஒக்டேன் 92 ரக பெட்ரோலின் விலை 24 ரூபாயால் உயர்த்தப்பட்டு, ஒரு லீற்றர் 434 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 495 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மண்ணெண்ணெயின் விலையும் 20 ரூபாயால் உயர்த்தப்பட்டு, ஒரு லீற்றர் 285 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.