2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

வெசாக் வாரம்: மதுபானசாலைகள் தற்காலிகமாக மூடல்!

உள்ளூர்May 27, 2026 · 3 months முன்0
வெசாக் வாரம்: மதுபானசாலைகள் தற்காலிகமாக மூடல்!

அரச வெசாக் வாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள மதுபான சாலைகள், இறைச்சிக் கடைகள் ,சூதாட்ட விடுதிகள், விலங்கு அறுப்பகங்கள், பந்தயப் பதிவகங்கள் ஆகியவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்தத் தற்காலிக மூடல்கள் இன்று (27) முதல் ஜூன் மாதம் 2 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் சமய வழிபாடுகளை அமைதியான முறையில் மேற்கொள்வதற்கும், வெசாக் காலப்பகுதியின் புனிதத் தன்மையைப் பேணுவதற்கும் ஏதுவாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.