2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சுகீஸ்வர பண்டார குழுவுக்கு பொலிஸ் அழைப்பு!

உள்ளூர்May 26, 2026 · 3 months முன்2
சுகீஸ்வர பண்டார குழுவுக்கு பொலிஸ் அழைப்பு!

வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, நவ ஜனதா பெரமுனவின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினருக்கு தலாங்கம பொலிஸாரினால் இன்று (26) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரது வீட்டிற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது சாணத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களினால் திருடப்பட்ட சம்பவம் குறித்து நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த மாதம் 28 ஆம் திகதி இக்குழுவினர் அவரது வீட்டிற்கு முன்னால் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். 

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மலக் சாணத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அங்கிருந்தவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.