2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கனமழை அபாயம் : கொத்மலை–கம்பளை வீதி தற்காலிகமாக மூடல்!

உள்ளூர்May 14, 2026 · 3 months முன்3
கனமழை அபாயம் : கொத்மலை–கம்பளை வீதி தற்காலிகமாக மூடல்!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கொத்மலை –கம்பளை (B431) பிரதான வீதி இன்று முற்பகல் முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியில் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட பரகம்மன பகுதியில் மீண்டும் வீதியில் வெடிப்புகள் தோன்றி, புதிய மண்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரித்ததை அடுத்து இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்த வீதியூடாக பயணிக்கும் அனைத்து வாகனங்களும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், மண்சரிவு அபாயம் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.