2026 August 17, Monday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
ரூ.770 கோடி மதிப்புள்ள அபூர்வ ஓவியங்கள் திருட்டு!நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கொள்வனவு நடவடிக்கைகள் தொடர்கின்றன!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது!கால்பந்துக்கு விடை கொடுக்கிறாரா ரொனால்டோ? ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிவிப்பு!இந்தியாவின் 462 ஓட்டங்களுக்கு பதிலடி கொடுக்க களமிறங்கும் இலங்கை!14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த சிறுவன் உயிரிழப்பு!7.7 ரிக்டர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து புளோரஸில் மீண்டும் சக்திவாய்ந்த அதிர்வு!கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!

மேல் மாகாணத்தில் டெங்கு தீவிரம்

உள்ளூர்May 12, 2026 · 3 months முன்1
மேல் மாகாணத்தில் டெங்கு தீவிரம்

இலங்கையில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் 42 அதி-அபாய வலயங்களை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 27,465 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 14 மரணங்களும் சம்பவித்துள்ளன.

தற்போதைய தரவுகளின் அடிப்படையில், மேல் மாகாணத்திலேயே அதிகளவிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். குறிப்பாக கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கண்ணங்கர, நாட்டில் தற்போது நிலவும் தொடர்ச்சியான மழைக்கால வானிலை காரணமாக டெங்கு பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரித்துள்ளார்.