இலங்கையின் பல மாகாணங்களுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (07) பிற்பகல் 1:00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையும், பலத்த மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய, சபரகமுவ, ஊவா, வடமத்திய, வடமேல், தெற்கு, மேல் மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் வவுனியா மாவட்டத்திலும் இந்நிலை காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




